குறிப்பிட்ட சில வருடங்களாக நல்ல பதிவுகளை எழுதி வரும் வலைப்பதிவர்கள், வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்த புறப்படுகையில் எந்த இடுகைகளை பற்றி சொல்வது என்ற குழம்ப வந்துவிடும். எல்லா இடுகைகளுமே சுட்டிக் காட்டப்பட வேண்டியவை தானோ என்று எண்ணத் தோன்றுபடியான பல இடுகைகளை நாங்கள் அவற்றில் காண நேரும். ஈற்றில் அரும் பெரும் ஜோதியின் அடி முடி அறிப் புறப்பட்ட போல கடந்த ஆண்டுடின் இடுகைகள் புரட்டி அவற்றில் கரைந்து போய்விட நேர்வதுண்டு. அப்படியான ஒரு வலைப்பதிவாக சயந்தனின் "சாரல்" வலைப்பதிவை சொல்லலாம்.
கடந்த நான்கு வருடமாக "சாரல்" வலைப்பதிவில் எழுதிவரும் இவர் ஆரம்பத்தில் "தினக்குரலில்" சிறுகதைகளையும், செய்திக்கட்டுரைகளையும் எழுதிவந்தவர். இவர் சுவிசுக்கு புலம்பெயர்ந்ததன் பின்னான காலங்கள் அச்சு ஊடகங்களில் இருந்து தூரமாகிப் போனதால் வலைப்பதிவிலே தற்போது அதிகம் எழுதுபவர். வலைப்பதிவில் ஒலி, ஒளிப்பதிவுகளை இடுவதில் ஆர்வம் மிக்கவர். பரிசோதனை முயற்சிகள் செய்வது இவருக்கு பிடித்தமானதே. சமயத்தில் அங்கத சொற்களை உதிர்க்கையில் நவீன காளமேகமென தோற்றம் காட்டுவதும் ரசிக்கக் கூடியதொன்றுதான்.
சில பதிவுகளை ஒரு நகைச்சுவை நாடகம் பார்ப்பது போல போலவும், இன்னும் சில பதிவுகளை கதிரையின் நுனியில் இருந்தும் வாசிக்க வைப்பவர். "என்ர மனுசியும் ரைவிங் பழக வேணும்" என்ற பதிவு சிரித்துக் கொண்டு வாசிக்க வைத்து பின்னர் சிந்திக்க தூண்டுவது. வலையுலகத்தின் ஓட்டம் பார்த்தும், அதே வேளை மிகவும் பொருத்திப் போகும் தரம் மிகுந்த பதிவுகளை இவர் ஈடுவார் என்பதற்கு இவரது "ஸ்ரீ லங்கா பாஸ்போட்" என்னும் கதையை சொல்வது பொருத்தமானது. வலைப்பதிவில் ஒரு காலத்தில் சூடான சொல்லாக இருந்த ஸ்ரீ லங்கா பாஸ்போட்டை பெறுவதற்காக ஒருவன் படும் கஸ்ரம் என்பதை புரியவைக்கும் அருமையான கதை.
காலங்களில் சூழ்ச்சி வேகத்தில் மறந்துவிட்ட மனிதர்களாய், நாம் என்றுமே சிந்தித்திராத பக்கமொன்றை பேசும் இன்னொரு சிறுகதை "அனாதைகள்" சமாதான உடன்படிக்கையின் நிமித்தம் யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பும் தங்களின் தரப்பு கைதிகளை பரிமாறிக் கொள்ள அப்பாவிகள் இன்றும் சிறையில் வாடுதல் குறித்து வருத்தியிரார். யுத்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்களே விடுதலை செய்யப்பட்டு விட, தன் எதிர்காலம் குறித்த நம்பிக்கையோடு தலைநகர் வரும் இளைஞன் தன் நிகழ்காலத்தையும் சேர்த்து இழக்கும் உருக வைக்கும் கதை. தன் காதலி தன்னை எதிர்பார்த்து எதிர்ப்பார்த்து....இறுதியில் இன்னொருவரை திருமணம் செய்து கொண்டாள் என்பதை நெழ்ச்சி மிகு வார்த்தைகளால் வனைபவர்.
காலக்கண்ணாடியிருத்தலை தவிர்த்து கற்பனை குதிரைகளை கதைகள் தட்டிவிடும் குணமற்றது இவரது படைப்புக்கள். பனம்பழம் விழம் சத்தத்தை தவிர வேறு அறியாக் கிராமங்களில் பல எடை குண்டுகள் விழுந்து வெடிக்கும் வாழ்க்கை எப்படி எங்களுக்கு அறிமுகமானது என்பது முதல் தான் தாயகம் விட்டு வெளியேறும் வரையான தனது நினைவுப்பதிவுகளை " நினைவழியா நாட்கள்" என்ற பெயரில் இவர் எழுதும் தொடர் பதிவு அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று. எறிகணைகள் விழுந்து வெடிக்கும் நாட்கள் அறிமுகமானதை இவரது வரிகளில் இப்படியெழுதுகின்றார்.
´´மருமோள் தம்பி எங்கை´´ அம்மம்மா நடுங்கும் குரலில் கேட்டவ பதிலை எதிர்பாராமல் உட்சென்று படுத்துக் கிடந்தவனை பாயோடு சுருட்டி தரதரவென்று இழுத்துவந்து முற்றத்தில் போட்டா. ´´மருமோள் தலைக்கு மேலை வெடிச்சு வெடிச்சுப் போகுது. என்ன கோதாரியோ தெரியேல்ல. உங்கை கிட்டடியளிலதான் விழுகுது.´´ அம்மம்மா ஆர்ப்பாட்டங்களில் அணைந்து போயிருந்த மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றினா. அம்மா நிலத்தில் வளர்த்தியிருந்த மகளைத் தூக்கி பாயில் வளர்த்தி தலையணை வைத்து விட்டா. மகன் எழும்பி சப்பாணி கட்டி முழிச்சிருந்தான். இந்தச் சத்தங்களும் இரைச்சல்களும் சாவினை ஏற்படுத்தி விடும் என்பதனையும் சாவு அச்சந்தரக்கூடியது என்பதனையும் அந்த ஆறு வயதுகளில் அவன் அறிந்திருந்தான்.
சாதிகள் எம் சமூகத்தில் எப்படியான கட்டமைப்புக்களில் இருந்தது என்று ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதாமல் நினைவழியா நாட்கள் தொடரின் "அப்பையண்ணை" என்ற பகுதியில் வரும் இரு பந்திகளை பாருங்கள்.
கடந்த நான்கு வருடமாக "சாரல்" வலைப்பதிவில் எழுதிவரும் இவர் ஆரம்பத்தில் "தினக்குரலில்" சிறுகதைகளையும், செய்திக்கட்டுரைகளையும் எழுதிவந்தவர். இவர் சுவிசுக்கு புலம்பெயர்ந்ததன் பின்னான காலங்கள் அச்சு ஊடகங்களில் இருந்து தூரமாகிப் போனதால் வலைப்பதிவிலே தற்போது அதிகம் எழுதுபவர். வலைப்பதிவில் ஒலி, ஒளிப்பதிவுகளை இடுவதில் ஆர்வம் மிக்கவர். பரிசோதனை முயற்சிகள் செய்வது இவருக்கு பிடித்தமானதே. சமயத்தில் அங்கத சொற்களை உதிர்க்கையில் நவீன காளமேகமென தோற்றம் காட்டுவதும் ரசிக்கக் கூடியதொன்றுதான்.
சில பதிவுகளை ஒரு நகைச்சுவை நாடகம் பார்ப்பது போல போலவும், இன்னும் சில பதிவுகளை கதிரையின் நுனியில் இருந்தும் வாசிக்க வைப்பவர். "என்ர மனுசியும் ரைவிங் பழக வேணும்" என்ற பதிவு சிரித்துக் கொண்டு வாசிக்க வைத்து பின்னர் சிந்திக்க தூண்டுவது. வலையுலகத்தின் ஓட்டம் பார்த்தும், அதே வேளை மிகவும் பொருத்திப் போகும் தரம் மிகுந்த பதிவுகளை இவர் ஈடுவார் என்பதற்கு இவரது "ஸ்ரீ லங்கா பாஸ்போட்" என்னும் கதையை சொல்வது பொருத்தமானது. வலைப்பதிவில் ஒரு காலத்தில் சூடான சொல்லாக இருந்த ஸ்ரீ லங்கா பாஸ்போட்டை பெறுவதற்காக ஒருவன் படும் கஸ்ரம் என்பதை புரியவைக்கும் அருமையான கதை.
காலங்களில் சூழ்ச்சி வேகத்தில் மறந்துவிட்ட மனிதர்களாய், நாம் என்றுமே சிந்தித்திராத பக்கமொன்றை பேசும் இன்னொரு சிறுகதை "அனாதைகள்" சமாதான உடன்படிக்கையின் நிமித்தம் யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பும் தங்களின் தரப்பு கைதிகளை பரிமாறிக் கொள்ள அப்பாவிகள் இன்றும் சிறையில் வாடுதல் குறித்து வருத்தியிரார். யுத்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்களே விடுதலை செய்யப்பட்டு விட, தன் எதிர்காலம் குறித்த நம்பிக்கையோடு தலைநகர் வரும் இளைஞன் தன் நிகழ்காலத்தையும் சேர்த்து இழக்கும் உருக வைக்கும் கதை. தன் காதலி தன்னை எதிர்பார்த்து எதிர்ப்பார்த்து....இறுதியில் இன்னொருவரை திருமணம் செய்து கொண்டாள் என்பதை நெழ்ச்சி மிகு வார்த்தைகளால் வனைபவர்.
காலக்கண்ணாடியிருத்தலை தவிர்த்து கற்பனை குதிரைகளை கதைகள் தட்டிவிடும் குணமற்றது இவரது படைப்புக்கள். பனம்பழம் விழம் சத்தத்தை தவிர வேறு அறியாக் கிராமங்களில் பல எடை குண்டுகள் விழுந்து வெடிக்கும் வாழ்க்கை எப்படி எங்களுக்கு அறிமுகமானது என்பது முதல் தான் தாயகம் விட்டு வெளியேறும் வரையான தனது நினைவுப்பதிவுகளை " நினைவழியா நாட்கள்" என்ற பெயரில் இவர் எழுதும் தொடர் பதிவு அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று. எறிகணைகள் விழுந்து வெடிக்கும் நாட்கள் அறிமுகமானதை இவரது வரிகளில் இப்படியெழுதுகின்றார்.
´´மருமோள் தம்பி எங்கை´´ அம்மம்மா நடுங்கும் குரலில் கேட்டவ பதிலை எதிர்பாராமல் உட்சென்று படுத்துக் கிடந்தவனை பாயோடு சுருட்டி தரதரவென்று இழுத்துவந்து முற்றத்தில் போட்டா. ´´மருமோள் தலைக்கு மேலை வெடிச்சு வெடிச்சுப் போகுது. என்ன கோதாரியோ தெரியேல்ல. உங்கை கிட்டடியளிலதான் விழுகுது.´´ அம்மம்மா ஆர்ப்பாட்டங்களில் அணைந்து போயிருந்த மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றினா. அம்மா நிலத்தில் வளர்த்தியிருந்த மகளைத் தூக்கி பாயில் வளர்த்தி தலையணை வைத்து விட்டா. மகன் எழும்பி சப்பாணி கட்டி முழிச்சிருந்தான். இந்தச் சத்தங்களும் இரைச்சல்களும் சாவினை ஏற்படுத்தி விடும் என்பதனையும் சாவு அச்சந்தரக்கூடியது என்பதனையும் அந்த ஆறு வயதுகளில் அவன் அறிந்திருந்தான்.
சாதிகள் எம் சமூகத்தில் எப்படியான கட்டமைப்புக்களில் இருந்தது என்று ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதாமல் நினைவழியா நாட்கள் தொடரின் "அப்பையண்ணை" என்ற பகுதியில் வரும் இரு பந்திகளை பாருங்கள்.
மலரக்காக்கு என்னை விட கொஞ்சம் வயசு மூத்த மகனொருவன் செல்வன் எண்டு இருந்தான். அவன் எங்கடை வீட்டை வரும் போதெல்லாம் சாப்பிட்டுவிட்டும் போவான். ஆனால் வீட்டை சொல்ல வேண்டாம் எண்டு மட்டும் சொல்லுவான். மலரக்கா வந்தால் மட்டும் தான் தம்பி ஓடிப்போய் சோடா வாங்கியாடா எண்டு அம்மா என்னைக் கலைப்பா. எனக்கு அதில் வருத்தமோ கவலையோ இல்லை. ஏனென்றால் மிஞ்சுற சோடா எனக்குத்தானே.
அப்பையாண்ணை திரும்பி வந்தார். நான் சைக்கிளில் ஏறிய பிறகு ஒரு உந்தில் எந்த வித நிலை குலைவும் இல்லாமல் சைக்கிளை ஓட்டத்தொடங்கினார். நான் அமைதியாக இருந்தேன். மனதிற்குள் செல்வமண்ணை, ஐயா, நான் மூவரையும் ஒரு வரிசையில் நிறுத்தினேன். செல்வமண்ணைக்கு யாரும் மூக்குப் பேணியில் தேத்தண்ணி கொடுக்கப் போவதில்லை. எனக்கு செல்வமண்ணையின்ர அம்மா மூக்குப் பேணியில் தந்தாலும் ஐயாவின் அம்மா அப்படித்தரவில்லை. ஆனால்…. ஐயாக்கு ?
எங்கள் சமூகத்தின் மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்றான சாதியக் கட்டமைப்பை இதை விட இலகு வரிகளில் விளங்க வைக்கும் அந்த பதிவும் வாசிக்கப்பட வேண்டிய ஒன்றுதான்.
சயந்தனின் பதிவுகளை பற்றியெழுதுகையில் அவற்றில் எதை பரிந்துரைப்பது என்பதை விட எதை பரிந்துரைகாமல் விடுவது என்னும் குழப்பமே எஞ்சுகின்றது. நான்கு வருடங்களில் அவர் எழுதியவற்றை நீங்கள் வாசிக்ககையில் அவற்றின் காலப் பெறுமதியை உணர்வீர்கள்.